புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பருத்தி ஆடையும்  தமிழ் மணமும்!

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு கைத்தறி (கோ-ஆஃப்டெக்ஸ்) தில்லையாடி வள்ளியம்மை நிறுவனம் புதியதாக மணமகன், மணமகள் உருவம்  பொறிக்கப்பட்ட

News image
Updated On :5 ஜனவரி 2014, 2:54 am

ஸ்ரீதேவி குமரேசன

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு கைத்தறி (கோ-ஆஃப்டெக்ஸ்) தில்லையாடி வள்ளியம்மை நிறுவனம் புதியதாக மணமகன், மணமகள் உருவம்
 பொறிக்கப்பட்ட முகூர்த்த பட்டுச் சேலையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விவரங்களை அறிய ஆவல் கொண்டு அந்நிறுவனத்தின் இயக்குநர்
 சகாயம் அவர்களைச் சந்தித்தோம். அவர் சொல்கிறார்...
 ""நான் கடந்த ஆண்டு இங்கு மாற்றலாகி வரும்பொழுதே விற்பனையைக் கூட்டுவதற்கான முயற்சியில் அரசாங்கம் இறங்கியிருந்தது. கடந்த ஆண்டு
 62 கோடி விற்பனையானது. இந்த ஆண்டு 100 கோடி என்று இலக்கு வைத்தோம். அதற்காக அலுவலர்கள் அனைவரும் ஒன்று கூடி பல ஆய்வுகள்
 மேற்கொண்டு முயற்சித்தோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக 120 கோடி விற்பனை ஆகியது நம்பிக்கை ஏற்படுத்தியது. இந்த நம்பிக்கையில்
 விளைந்தது தான் மணமக்கள் சேலை.
 மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் உருவானதற்கு முதல் காரணம் தமிழ்நாடு கைத்தறியின் விற்பனையை அதிகரிக்க
 வேண்டும் என்பதுதான். உடனடியாக இந்த வகை சேலைகளுக்கு ஆர்டர்களும் வந்திருக்கின்றன.
 இந்தச் சேலைகளை விளம்பரப்படுத்துவதற்காக நாங்களே திருமண மண்டபங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்து வருகிறோம்.
 இதில் இன்னும் கூடுதல் வடிவமைப்பு சேர்ப்பதற்காக கொஞ்சம் காத்திருக்கிறோம்.
 இந்தச் சேலையை உருவாக்கியவர் 80 வயதுடைய எ.சின்னசாமி என்பவர். இவர் 40 ஆண்டுகளாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவரது
 குடும்பமே சேர்ந்து 20 நாட்கள் உழைத்து இந்த சேலைகளை உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு புகைப்படம் எடுத்தால் அதிகபட்சம் 30 ரூபாய்
 கொடுக்கலாம், அதுவே ஓவியமாக இருந்தால் 300 ரூபாய் கொடுக்கிறோம். காரணம் அதில் ஒரு கலைநயம், உழைப்பு
 இருக்கிறது.
 அது போலதான் ஆலையில் நெய்யக்கூடிய சேலை புகைப்படம் போன்றது, அதுவே நெசவாளி நெய்யக்கூடிய சேலை ஓவியம் போன்றது. அவர்களை
 மதிக்கும் வகையில் ஊதியமும் உயர்த்தியிருக்கிறோம். இந்த வகையான மணமக்கள் சேலையை 60ஆம் கல்யாணம் செய்து கொள்ளும்
 தம்பதிகளுக்கு, அவர்களது பிள்ளைகளும் பரிசளிக்கலாம்...
 பருத்தி சேலைகள், பட்டு சேலைகளில் "சரித்திரா'சேலைகள் என உருவாக்கியிருக்கிறோம். அதாவது தமிழ்நாட்டில் உள்ள சரித்திர முக்கியத்துவம்
 வாய்ந்த இடங்களில் உள்ள சிற்பங்கள், ஓவியங்களை காட்சிப்படுத்தி வடிவங்களை சேலைகளில் கொண்டுவந்தோம். இந்த தீபாவளிக்கு தலைநகர்
 தில்லியில் இந்தச் சேலைகளை புதிதாக அறிமுகப் படுத்தினோம். பதினைந்து நாட்களில் 25சேலைகளுக்கு மேல் விற்பனையானது. குறிப்பாக ஏழாம்
 நூற்றாண்டின் சித்தன்னவாசல் குகை ஓவியங்களை சேலைகளில் வடிவமைத்திருந்தோம். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.
 படுக்கை விரிப்புகளில் "குட்டீஸ் கலெக்ஷன்ஸ்' என்று குழந்தைகளை கவரும்படி கார்ட்டூன் ஓவியங்களைக் கொண்டு உருவாக்கினோம். அடுத்து
 "இலக்கியா' என்று தமிழ் இலக்கியத்தில் சங்க கால இலக்கியங்கள் முதல் சமீபகால இலக்கியம் வரை காட்சிப்படுத்தி உருவாக்கியிருக்கிறோம்.
 அதை போல் திருக்குறளையும் காட்சிப்படுத்தியுள்ளோம். இதில் குறளின் அடிகளுக்கு ஏற்ப உருவங்களை உருவாக்கி அதில் திருக்குறளையும்
 பொறித்துள்ளோம். சமீபத்தில், "பொன்னியின் செல்வன்', "சிவகாமியின் சபதம்' போன்ற நாவல்களையும் காட்சிப்படுத்தியுள்ளோம், அடுத்து
 "கல்வியும்,காட்சியும்' என்று, விஞ்ஞானிகளும், அவர்களது கண்டுபிடிப்புகளும், அறிவியல் சார்ந்த விசயங்களும், வானில் உள்ள சூரிய குடும்பத்தின்
 கோள்களும் காட்சிப்படுத்தி உள்ளோம்.
 தமிழ்நாட்டில் வருடத்தில் ஒரு நாள் ஒவ்வொரு துறையிலும் வேலை செய்பவர்கள் "வேட்டி தினம்' கடைப்பிடித்து வேட்டி அணிந்து வர வேண்டும்
 என்றும் இதற்காக பல்கலைக்கழகங்கள், பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் என பல துறைகளுக்கு கடிதம் மூலம்
 "வேட்டிதினம்' குறித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது நறுமண வேட்டி, மைனர் வேட்டி,
 நாட்டாமை வேட்டி, இளவட்ட வேட்டி, சின்னமாப்ளே வேட்டி, கரைப்படாத ஸ்டைன் கார்ட் வேட்டி.
 இதைத் தவிர கிராமப்புறங்கள், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி போன்ற இடங்களில் தமிழர்களால் அதிகம் விரும்பி உபயோகப்படுத்தும் காசி
 துண்டில் அதன் நிறங்களுக்காகச் சேர்க்கப்படும் ரசாயன வண்ணத்திற்கு பதிலாக உணவு பொருட்கள்,மருந்துப் பொருட்கள் (உதாரணத்திற்கு அவுரி
 இலைகள், புளி) போன்றவற்றை கொண்டு இயற்கை வண்ணம் மூலம் "ஆரோக்கியா துண்டு' என உருவாக்கியிருக்கிறோம்.
 இந்த துண்டு செய்வதற்கான செலவு கூடுதல் என்பதால் விலையும் சற்று கூடுதலாகவே விற்கிறோம். அப்படியிருந்தும் ஒரு நாளைக்கு 5 துண்டுகள்
 வீதம் விற்கப்படுகிறது. இது எங்களுக்கு மேலும் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. இந்தவகையான கைத்தறி ஆடைகளின் விற்பனை அதிகரித்தால்
 நெசவாளர்களுக்கு இன்னும் சிறப்பு செய்ய காத்திருக்கிறோம்''என்றார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.